search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சியாளர் கைது"

    • சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.
    • போலீசார் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஐதராபாத் மேடிப்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் மாடியில் தனி நபர் ஒருவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    இந்த உடற்பயிற்சி கூடத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சக நண்பர்களுடன் விளையாடுவதற்காக சிறுமி வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

    சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு 3 மணிநேரம் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். வீட்டில் இருந்து விளையாட சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மகளை தேடிச் சென்றார்.

    அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமிகளுடன் தனது மகள் இல்லாத இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மகளை தேடி அலைந்து திரிந்தார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சில பெண்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் கதவை திறந்தார்.

    அவரிடம் சிறுமி குறித்து விசாரித்தபோது சிறுமி உள்ளே இருப்பதாக தெரிவித்தார். அப்போது பெண்கள் சிறுமியை ஏன் உடற்பயிற்சி கூடத்திற்குள் நீண்ட நேரம் வைத்திருந்தாய் என கேள்வி கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள் பயிற்சியாளரை சரமாரியாக தாக்கி, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×